கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித கூறியுள்ளார்.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த இதுதொடர்பாக தெரிவிக்கையில், பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் மாதம் நாடு முழுவதிலும் 4 ஆயிரத்து 661 மத்திய நிலையங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment